ஒரு கவிக்கு
உரு கொடுக்க
மறு முயற்சி(கள்) செய்யும்
சிறு கவி நான்!
ஆனால்,
கரு முழுமைக்கும்
உரு கொடுத்து
மறுபிறவி(கள்) எடுக்கும்
ஒரு அன்னையாகவும்
வீட்டின் மையக்
கருவாக, அன்பின்
உருவாக வாழும்
ஒரு உன்னத
உறவாகவும்
சரி பாதி உயிராக,
ஆணின் இறுதிக் கால
உற்ற துணையாகவும்
உடன் பிறந்து,
சரி பங்கு பெற்று,
அவ்வப்போது பெற்றோரிடம்
பற்ற(வும்) வைத்து,
அன்பையும், அழகான வம்பையும்
சரி பாதி தரும் சகோதரிகளாகவும்,
வாழும் மகளிர் அனைவரும்
அதிகார மையத்தில்,
தைரியமாக முன்னே(றி) வர,
வாழ்த்துகள் கூற
கவி படைக்க முயன்றேன்.
நன்றி,
தெய்வா
No comments:
Post a Comment