நம்ம சமுதாயத்துல வாழ்க்கை துணை அப்டினா பெண்களுக்கு மட்டும் தான் அப்டின்னு ஒரு thought இருக்கு...
எனக்கு திடீர்னு பல்பு எரிஞ்சது ("பல்பு" எரியும் போது நான் இருந்த இடத்துல வேற சின்ன பல்பு எறிஞ்சுட்டு இருந்தது)
முன்னாடி காலத்துல, திருமணம் அப்டிங்கரத பெண்களுக்கான ஒரு சமுதாய பாதுகாப்பு அப்படின்னு சொல்லி நடத்தி வச்சாங்க.. அப்போ பெண்களுக்கும் ஆண்களுக்கும் (அதாங்க புருஷன் பெண்டாட்டி) இடையே வயசு வித்தியாசம் நெறைய இருக்கும்.. (எங்க தாத்தா பாட்டிக்கு எல்லாம் குறஞ்சது 10 வயசு வித்தியாசம் இருக்கும்)
அதனால ஆண்கள் ரொம்ப சீக்கிரமாகவே முதுமை அடைஞ்சுடுவாங்க..
அந்த டைம் ல மனைவி தான் கணவருக்கு வேண்டிய பணிவிடைகள் செஞ்சு அவர கண்ணும் கருத்துமாக பாத்துப்பாங்க..அப்போ அவங்க கணவருக்கு சிறந்த வாழ்க்கை துணையாய் இருந்து அவர கவனிச்சுப்பாங்க..
அப்டினா யாரு வாழ்க்கை துணை?
(இப்படி கேள்வி குறியோட நான் இந்த டாபிக்க நிப்பாட்டின அம்புட்டுதான்.. நம்ம மக்கள் இந்த ப்லோக்-எ எரிச்சுடுவாங்க..)
சரி.. இன்னொரு விஷயம்.. நான் முன்னாடியே ரொம்ப கேர்புல்லா ஆரம்பிச்சதுக்கு காரணம் இந்த காலத்துல தாத்தா பாட்டி காலம் வரைக்கும் ரெண்டு பெரும் சேர்ந்து வாழ்றது ரொம்ப கஷ்டம். அப்படியே அவங்க சேர்ந்து இருந்தாலும் மேல சொன்ன சமாச்சாரங்கள் அப்படியே உல்ட்டாவா இருக்கும் :-)
ஒ.கேங்க... இப்போ வாழ்க்கையோட பர்ஸ்ட் ஹால்ப் க்கு வர்றேன்.. திருமணம் செஞ்சு குடும்ப வாழ்க்கை தொடங்குற நம்ம தம்பதியர் சந்தோசமா வாழ்க்கை நடத்துவாங்க..
கணவனோட கடமை வந்து , மனைவிக்கு தேவையான அனைத்தும் செஞ்சு, அவங்களுக்கு நல்ல பாதுகாப்பு கொடுக்கணும்.. பின்னாடி குழந்தையும் (இங்க plural தான் சரியா இருக்கும்..) பிறந்ததுக்கு அப்புறம், அவங்க அனைவருக்கும் தேவையானத செஞ்சு கொடுக்கணும்..
மொத்ததுல பர்ஸ்ட் ஹால்ப் வாழ்க்கை துணை நம்ம தலைவருதான்..
செகண்ட் ஹால்ப் க்கு நம்ம தலைவிதான்.
என்னங்க நான் சொல்றது சரி தானே..
சரி, இப்போ உள்ள வாழ்கையில மேல சொன்னது சரியா வருமா???????
(மறுபடியும் கேள்வி குறியோடதாங்க நிக்குது.. )
No comments:
Post a Comment