பணம்! நீர்!
சில பேருக்கு தண்ணீராக
பல பேருக்கு கண்ணீராக
சில பேருக்கு ஏரியாக
பல பேருக்கு ஓடும் நதியாக
சிலருக்கு பன்னீராக
பலருக்கு வெந்நீராக
சிலருக்கு பெருவெள்ளமாய்
பலருக்கு சிறு துளிகளாய்
தண்ணீர் போல துள்ளித் திரியும்
உன்னிடம் ஒரு வேண்டுகோள்!
பாயுமிடமெல்லாம் தங்கிவிடு சிலகாலம்!
ஆம்,
நீரின்றி காய்ந்த இடத்தில் மட்டும்
பாயும் பொழுதெல்லாம் தங்கிவிடு!
அவர்கள் மனமும் வாழ்வும் செழிக்கும் வரை
நனைத்து விட்டுப் போ!
கொழுத்து கிடக்குமிடத்தில் வற்றிவிடு!
உடனே வற்றிவிடு!
ஆம்,
தேக்க இடமின்றி இருப்பவர்களிடம்
உடனே வற்றிவிடு!
கிணற்று நீர் போல நிலைத்து நில்லாதே!
ஓடும் நதி போல ஓடிக்கொண்டே இரு!
No comments:
Post a Comment