Thursday, 6 June 2019

வீட்டுக்கு வீடு வாசப்படி

சும்மா. Fun

வீட்டுக்கு வீடு வாசப்படி

மனைவி: என்னங்க. எங்க இருக்கீங்க? (கொஞ்சம் சத்தமான குரலுடன்)
கணவன்: ஏன்? இங்க தான் மா இருக்கேன். (முகத்தில் லேசான கலவரத்துடன்)

மனைவி: ஆமா, சும்மா தான் கேட்குறேன். நீங்க எனக்குன்னு என்ன தான் செஞ்சி இருக்கீங்க?
கணவன்: (குழப்பத்துடன்) போன மாசம் தானே மா, கல்யாண நாளைக்குன்னு, ரெண்டு பவுன் ல வளையல் வாங்கி கொடுத்தேன். அப்புறம் போன ஞாயிற்றுக்கிழமை கூட ஒரு பட்டு புடவை எடுத்துக் கொடுத்தேனே மா?

மனைவி: அப்போ, நீங்க எல்லாத்தையும் சொல்லிக் காண்பிக்குறதுக்கு தான் செய்றீங்களா?? ஹ்ம்ம்ம்..
கணவன்: (மிரட்சியுடன்) இல்லம்மா, நீ.... தானே மா கேட்ட.. என்ன பண்ணீங்கன்....னு?

மனைவி: ஆமா, இதுக்கு நீங்க எனக்கு செய்யாமலே இருக்கலாம்ல.. பெருசா செஞ்சிட்டீங்களாக்கும்.
கணவன்: சரிதான் தாயே. நீ சொன்னது தான் சரி. அது போன மாசம், போன வாரம். இப்போதைக்கு நான் உனக்கு எதுவுமே செய்யல.. ஒத்துக்கிறேன்...

மனைவி: அது.
கணவன்: சரி. என்ன வேணும் சொல்லுமா?
(எப்படியெல்லாம் லாக் ஆகிக் கிடக்குறாங்க (சில) பாவப்பட்ட கணவன்மார்கள்)

No comments: