எழில் அப்பா: இந்தா பாரு, எழில், முதல்ல டிவிய switch Off பண்ணு, அப்புறம் சாப்பிடு!!
எழில்: ஓ.. அப்டீனா,
”சாப்பிட்டுட்டே” டீவிய பாக்கக்கூடாது
”சாப்பிட்டுட்டு” டீவி-ய பாக்கணுமா அப்பா?
”சாப்பிட்டுட்டே” டீவிய பாக்கக்கூடாது
”சாப்பிட்டுட்டு” டீவி-ய பாக்கணுமா அப்பா?
எழில் அப்பா: அடேயப்பா, நான் சொன்ன விசயத்த, ”அழகான வார்த்தைகள்” பயன்படுத்தி சொல்றியே ராசா.. நல்லா வருவ எழில்..
எழில்: சரிப்பா, இனிமேல் டீவிய ஆஃப் பண்ணிட்டே சாப்பிடுறேன் அப்பா.
நம்ம சொல்ற விசயத்த பசங்க மனசுல பதியிற மாதிரி சொன்னா போதும். கற்பூரம் மாதிரி பிடிச்சிக்கிறாங்க பசங்க..
ஏன்னா, குழந்தைகள் எப்பவுமே பசுமரம்.. நாம தான் நல்ல ஆணிய பதமா அடிக்கனும்
அது, நிச்சயமா, ஆழமா வேர் வரை செல்லும்!!!
அது, நிச்சயமா, ஆழமா வேர் வரை செல்லும்!!!
இன்னும், ஒரு பசுமரத்தாணி பதிவுடன் அடுத்து வருகின்றேன்!
நன்றி.
No comments:
Post a Comment