Saturday, 10 February 2018

திருமணநாள் நினைவு கூர்தல்

எப்படி நடந்தது என்றறியவில்லை நான்!!!

அவள் என்னுடன் இணைந்து, 12-ஆண்டுகள் பயணித்தது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை..

இது நான் செய்த தியாகமா? இல்லை,
என்னவள் செய்த தியாகமா? இல்லை,
இருவரும் இணைந்து செய்த சாதனையா ?

முதலாம் ஆண்டில், (அறியா வயதில்) பெரிய எதிர்பார்ப்புகளுடன் துவங்கிய மண வாழ்வு, 

சில பெரிய எதிர்ப்புகளுடன் கடந்த வாழ்வு,
(இன்னும் எதிர்ப்புகள் இருக்கவே செய்கின்றன)

சில பெரிய ஏற்றத்துடனும்,
பல சிறிய ஏமாற்றங்களுடனும்,

சில பெரிய ஊடல்களுடனும்,
பல சிறிய ஊடல்களுடனும்,

பல முறை ”பிரிந்தே சென்று விடுவேன்” என முறைத்த பொழுதுகளிலும், நாட்களிலும்
பயணித்தோம் நாங்கள்...

முத்துநகரில் துவங்கி, ஐடி தலைநகரில் கடந்து, இன்று, சிலிகான் வேலியில் நிலை கொண்டுள்ளது எங்களது மண வாழ்வு...

ஆக, இன்று 12 ஆண்டுகள் முடிந்து, 13-ஆம் ஆண்டில் நடை எடுத்து வைக்கின்றோம்...
இன்னும் பல ஆண்டுகள் ஒன்றிணைந்து பயணிப்போம் என்ற நம்பிக்கையில்..

”கடவுள்” மற்றும் ”ஆண்டவரின்” ஆசிர்வாதமும்,
பெற்றவர்கள், பெரியவர்களின் ஆசியும்,

நண்பர்களின் அன்பும் இருக்கும் வரை, எங்களது கனவு நிறைவேறும் என்பதில் எனக்கு துளி ஐயமில்லை...

07 Sep 2017 is our 13th Wedding Day (12th Wedding Anniversary)...

No comments: