சிறுகதை! சில நிமிட வாசிப்பு!!
”ப்ளாஸ்டிக் பூக்கள்”
(கரையும் கண்மணிகள்)
ஒருநாள், கண்மணியின் பெற்றோர் (ராகவி, ரகு) கடைக்கு கிளம்பும்போது,
ராகவி: கண்மணி! கண்மணி! விளையாடியது போதும், வா, கடைக்கு போகனும்.
கண்மணி: இல்லம்மா, நான் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடனும்மா ப்ளீஸ். நீங்க வேணா போய்ட்டு வாங்க.. நான், இந்த கயல் ஆண்ட்டி வீட்லேயே இருக்கிறேன்.
ராகவி: சரி எங்கேயும் போகாம, இங்கேயே இரு.
கயல், கண்மணிய கொஞ்சம் பார்த்துக்கோ. நான், கடைக்கு போய்ட்டு, ஒரு 2-மணி நேரத்துல வந்துடுறேன்
(கயல், கண்மணி அம்மாவின் தோழி)
கடையில், தேவையான பொருட்கள் வாங்கும் போது, வாட்ஸப்பில் ஒரு பதிவு வருகின்றது
“சென்னையில் பயங்கரம்!!! வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை! இறுதியில், உயிரோடு எரித்துக்கொலை!!!”
ராகவி: சிறிது பதட்டத்துடன், தனது தோழி கயலுக்கு அழைப்பு கொடுக்கிறாள்.
”கயல், கண்மணி எப்படிமா இருக்கா? என்ன பண்ணிகிட்டு இருக்கா மா?”
கயல்: சொல்லு ராகவி… கண்மணி, வீட்டில தான் விளையாடிட்டு இருந்தா. நான், இப்ப தான், என்னோட பையன கூட்டிட்டு, டிராயிங் கிளாசுக்கு வந்தேன். இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். வீட்டுல, என் வீட்டுகாரர் ஏதோ வேலை பாத்துட்டு இருந்தாரு. அதான், நானே இவன ட்ராப் பண்ண வந்தேன்.
ராகவி: ஓ, அப்படியா. சரி கயல். நல்லது. சும்மா தான், எப்படி இருக்கானு கேட்டேன். டேக் கேர்.. அப்புறமா பேசுறேன்.. வச்சுடுறேன்.
கணவரிடம்,
“ஏங்க, எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. கண்மணி, 7-வயசு பொண்ணு. அவள தனியா விட்டுட்டு வந்துருக்க கூடாதுனு படபடக்குது. வாங்க சீக்கிரமா வீட்டுக்கு போகலாம்.
ரகு: இருமா, பில்லிங் கவுண்டர் ல கூட்டம் அதிகமா இருக்கு.. இன்னும் பதினஞ்சு நிமிசத்துல முடிச்சிடலாம். வீட்டுக்கு, இன்னும் முக்கால் மணி நேரத்துல போய்டலாம்..
ஆனால், அம்மா-வுக்கோ, 45-நிமிடங்களும், 45-வருடங்களாய் நகர்ந்தன…
பில்லிங் மற்றும் ட்ராஃபிக் எல்லாவற்றையும் கடந்து, ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் வீட்டிற்கு அல்ல, கயல் வீட்டிற்கு!!!
டிங் டாங் (காலிங் பெல் ஓசை ஒலித்ததும் சிறிது நிமிடங்கள் கழித்து, கதவு திறக்கும் ஓசை கேட்டது)
கண்ணன்: வாங்க வாங்க!!! என்ன, அதுக்குள்ள வந்துட்டீங்க.. 2-மணி நேரம் ஆகும்னு சொன்னீங்க. ட்ராஃபிக் ஏதும் இல்லையா?
(ஜோக் என்றாலும், சிரிப்பு வரவில்லை ராகவிக்கும், ரகுவிற்கும்)
ஹாலில் விளையாட்டு இருந்த கண்மணி அங்கு இல்லாததால், வீட்டில் கண்களை அலசிக்கொண்டே பேச்சு கொடுத்தார்கள்..
ராகவி: கண்மணி ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டாளா? உங்களுக்கு ஏதோ வேலை இருக்குதுனு கயல் சொன்னா. தொந்தரவு பண்ணதுக்கு மன்னிக்கனும்.
ஆமா கண்மணிய எங்கங்க? விளையாட்டுப்பொருட்கள் அப்படியே கிடக்குது. ஆள காணோம்?
கண்ணன்: அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க.. அவ பாட்டுக்கு தான் இருந்தா. அவசரமா, பாத்ரூம் வருதுனு சொன்னா. அதான் பாத்ரூம் போய் இருக்கா. இப்ப வந்துடுவா.
ராகவிக்கு பதட்டம் அதிகரிக்கவே செய்தது..
கண்மணி, கண்மணி என்று கூப்பிட வேண்டும் போல இருந்தது.. ஆனால், தயக்கத்துடன் அமர்ந்திருந்தார்கள்.
கண்ணன்: ஏன், உங்க ஃபேஸ் ஒரு மாதிரி இருக்குது? ஏதும் ப்ராப்ளமா? இஃப் யு டோண்ட் மைண்ட், என்கிட்ட சொல்லலாம்!
ராகவி: இல்லங்க. இப்போ ஒரு செய்தி பார்த்தேன். பார்த்ததில் இருந்து மனசுக்கு சரியே இல்ல. அதான்…
கண்ணன்: எந்த செய்தினு தெரிஞ்சுக்கலாமா?
ரகு: இல்ல கண்ணன், அது வந்து! அது வந்து! நேத்து சென்னை-ல, சென்னைல,
கண்ணன்: ஓ, அதுவா. நானும் பார்த்தேங்க. மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருந்துச்சி. இப்படி பிஞ்சு குழந்தைகள்னு கூட பாக்காம, எப்படித்தான் மனசு வருதோ. அவங்கள எல்லாம் என்ன பண்றது?
ராகவி: சரிங்க. இவ்ளோ நேரம் ஆச்சு, கண்மணிக்கு என்னாச்சு? காணோம்?
கண்ணன்: ஹ்ம்ம். இப்போ எனக்கு புரியுது. உங்க பதட்டத்துக்கு என்ன காரணம்னு. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.
பசிக்குது-னு சொன்னா, அதான் கொஞ்சம் ப்ரட் ரோஸ்ட் பண்ணி கொடுத்தேன்.. அப்புறம் கொஞ்சம் மில்க் ஆத்தி கொடுத்தேன். அதான், சம்திங் ராங்னு நினைக்கிறேன்.. (என்னோட சமையல் ஒத்துக்கல போல)
கண்மணி, பாத்ரூம்ல இருந்து வெளிப்பட்டு ராகவியை நோக்கி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். நெறைய ப்ரட், அப்புறம் மில்க் சாப்பிட்டேனா, அதான் வயிறு சரியில்லமா. இப்போ, ஆல் க்ளியர் ஆகிட்டு மா
கண்ணன்: ரகு ப்ளீஸ் நோட், எனக்கு பெண்குழந்தை இல்ல. அதனால, கண்மணிய என்னோட குழந்தையாகத் தான் நான் பார்க்கிறேன். நீங்க நினச்சிட்டு வந்த மாதிரி எதுவும் நான் பண்ணல. நான் ஒரு நல்ல ”தந்தையாக” இருக்க விரும்புறேன். ஸோ, தயவு செய்து, உங்க மனசுல இருந்து, என்னைப்பற்றி நினச்சு இருந்தத அழிக்கனும்னு ரிக்வஸ்ட் பண்றேன். ப்ளீஸ்.
ராகவி: ஆமா, எங்களுக்கும் ”ஆல் க்ளியர்” ஆகிட்டு!!!
ரகு: ஆனந்த கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறார்.
”மையக்கருத்து:”
பெண்குழந்தைகள் மீது சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் வன்மமும், பெற்றவர்களின் மனதில் ஆயிரம் சந்தேகங்களையும், பதட்டத்தையுமே வளர்க்கின்றன. ஆண்கள் மீது இருந்த மதிப்பு குறைந்து, பயம் அதிகமாவது வேதனை…
இப்படி, ஒவ்வொரு பூக்களையும், மொட்டுக்களிலேயே நசுக்கி, அழித்துக்கொண்டே இருந்தால், வரும் காலத்தில் பூக்களுக்கு எங்கே போவீர்கள்?
கண்களை மட்டும் கவரும் ”ப்ளாஸ்டிக் பூக்களை” அணிந்து கொள்ள வேண்டியது தான்!!! வேறு என்ன செய்ய?
இக்குற்றத்திற்கு கடும் தண்டனை மட்டும் தீர்வாகாது. அடிப்படையில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
பெண் என்பவள், இன்னோரு பாலினம் அவ்வளவே.
அவர்களுக்கு அடிபட்டாலும் வலிக்கும். நமக்கு பட்டாலும் வலிக்கும். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்ல வேண்டியது பாவங்களை அல்ல.. படிப்பினைகளை.. நல்லொழுக்கங்களை!!!
நன்றியுடன் தேவா…
”ப்ளாஸ்டிக் பூக்கள்”
(கரையும் கண்மணிகள்)
ஒருநாள், கண்மணியின் பெற்றோர் (ராகவி, ரகு) கடைக்கு கிளம்பும்போது,
ராகவி: கண்மணி! கண்மணி! விளையாடியது போதும், வா, கடைக்கு போகனும்.
கண்மணி: இல்லம்மா, நான் இன்னும் கொஞ்ச நேரம் விளையாடனும்மா ப்ளீஸ். நீங்க வேணா போய்ட்டு வாங்க.. நான், இந்த கயல் ஆண்ட்டி வீட்லேயே இருக்கிறேன்.
ராகவி: சரி எங்கேயும் போகாம, இங்கேயே இரு.
கயல், கண்மணிய கொஞ்சம் பார்த்துக்கோ. நான், கடைக்கு போய்ட்டு, ஒரு 2-மணி நேரத்துல வந்துடுறேன்
(கயல், கண்மணி அம்மாவின் தோழி)
கடையில், தேவையான பொருட்கள் வாங்கும் போது, வாட்ஸப்பில் ஒரு பதிவு வருகின்றது
“சென்னையில் பயங்கரம்!!! வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் தொல்லை! இறுதியில், உயிரோடு எரித்துக்கொலை!!!”
ராகவி: சிறிது பதட்டத்துடன், தனது தோழி கயலுக்கு அழைப்பு கொடுக்கிறாள்.
”கயல், கண்மணி எப்படிமா இருக்கா? என்ன பண்ணிகிட்டு இருக்கா மா?”
கயல்: சொல்லு ராகவி… கண்மணி, வீட்டில தான் விளையாடிட்டு இருந்தா. நான், இப்ப தான், என்னோட பையன கூட்டிட்டு, டிராயிங் கிளாசுக்கு வந்தேன். இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். வீட்டுல, என் வீட்டுகாரர் ஏதோ வேலை பாத்துட்டு இருந்தாரு. அதான், நானே இவன ட்ராப் பண்ண வந்தேன்.
ராகவி: ஓ, அப்படியா. சரி கயல். நல்லது. சும்மா தான், எப்படி இருக்கானு கேட்டேன். டேக் கேர்.. அப்புறமா பேசுறேன்.. வச்சுடுறேன்.
கணவரிடம்,
“ஏங்க, எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. கண்மணி, 7-வயசு பொண்ணு. அவள தனியா விட்டுட்டு வந்துருக்க கூடாதுனு படபடக்குது. வாங்க சீக்கிரமா வீட்டுக்கு போகலாம்.
ரகு: இருமா, பில்லிங் கவுண்டர் ல கூட்டம் அதிகமா இருக்கு.. இன்னும் பதினஞ்சு நிமிசத்துல முடிச்சிடலாம். வீட்டுக்கு, இன்னும் முக்கால் மணி நேரத்துல போய்டலாம்..
ஆனால், அம்மா-வுக்கோ, 45-நிமிடங்களும், 45-வருடங்களாய் நகர்ந்தன…
பில்லிங் மற்றும் ட்ராஃபிக் எல்லாவற்றையும் கடந்து, ஒரு வழியாக வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள்.
அவர்கள் வீட்டிற்கு அல்ல, கயல் வீட்டிற்கு!!!
டிங் டாங் (காலிங் பெல் ஓசை ஒலித்ததும் சிறிது நிமிடங்கள் கழித்து, கதவு திறக்கும் ஓசை கேட்டது)
கண்ணன்: வாங்க வாங்க!!! என்ன, அதுக்குள்ள வந்துட்டீங்க.. 2-மணி நேரம் ஆகும்னு சொன்னீங்க. ட்ராஃபிக் ஏதும் இல்லையா?
(ஜோக் என்றாலும், சிரிப்பு வரவில்லை ராகவிக்கும், ரகுவிற்கும்)
ஹாலில் விளையாட்டு இருந்த கண்மணி அங்கு இல்லாததால், வீட்டில் கண்களை அலசிக்கொண்டே பேச்சு கொடுத்தார்கள்..
ராகவி: கண்மணி ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டாளா? உங்களுக்கு ஏதோ வேலை இருக்குதுனு கயல் சொன்னா. தொந்தரவு பண்ணதுக்கு மன்னிக்கனும்.
ஆமா கண்மணிய எங்கங்க? விளையாட்டுப்பொருட்கள் அப்படியே கிடக்குது. ஆள காணோம்?
கண்ணன்: அப்படியெல்லாம் ஒண்ணுமில்லங்க.. அவ பாட்டுக்கு தான் இருந்தா. அவசரமா, பாத்ரூம் வருதுனு சொன்னா. அதான் பாத்ரூம் போய் இருக்கா. இப்ப வந்துடுவா.
ராகவிக்கு பதட்டம் அதிகரிக்கவே செய்தது..
கண்மணி, கண்மணி என்று கூப்பிட வேண்டும் போல இருந்தது.. ஆனால், தயக்கத்துடன் அமர்ந்திருந்தார்கள்.
கண்ணன்: ஏன், உங்க ஃபேஸ் ஒரு மாதிரி இருக்குது? ஏதும் ப்ராப்ளமா? இஃப் யு டோண்ட் மைண்ட், என்கிட்ட சொல்லலாம்!
ராகவி: இல்லங்க. இப்போ ஒரு செய்தி பார்த்தேன். பார்த்ததில் இருந்து மனசுக்கு சரியே இல்ல. அதான்…
கண்ணன்: எந்த செய்தினு தெரிஞ்சுக்கலாமா?
ரகு: இல்ல கண்ணன், அது வந்து! அது வந்து! நேத்து சென்னை-ல, சென்னைல,
கண்ணன்: ஓ, அதுவா. நானும் பார்த்தேங்க. மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருந்துச்சி. இப்படி பிஞ்சு குழந்தைகள்னு கூட பாக்காம, எப்படித்தான் மனசு வருதோ. அவங்கள எல்லாம் என்ன பண்றது?
ராகவி: சரிங்க. இவ்ளோ நேரம் ஆச்சு, கண்மணிக்கு என்னாச்சு? காணோம்?
கண்ணன்: ஹ்ம்ம். இப்போ எனக்கு புரியுது. உங்க பதட்டத்துக்கு என்ன காரணம்னு. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்.
பசிக்குது-னு சொன்னா, அதான் கொஞ்சம் ப்ரட் ரோஸ்ட் பண்ணி கொடுத்தேன்.. அப்புறம் கொஞ்சம் மில்க் ஆத்தி கொடுத்தேன். அதான், சம்திங் ராங்னு நினைக்கிறேன்.. (என்னோட சமையல் ஒத்துக்கல போல)
கண்மணி, பாத்ரூம்ல இருந்து வெளிப்பட்டு ராகவியை நோக்கி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள். நெறைய ப்ரட், அப்புறம் மில்க் சாப்பிட்டேனா, அதான் வயிறு சரியில்லமா. இப்போ, ஆல் க்ளியர் ஆகிட்டு மா

கண்ணன்: ரகு ப்ளீஸ் நோட், எனக்கு பெண்குழந்தை இல்ல. அதனால, கண்மணிய என்னோட குழந்தையாகத் தான் நான் பார்க்கிறேன். நீங்க நினச்சிட்டு வந்த மாதிரி எதுவும் நான் பண்ணல. நான் ஒரு நல்ல ”தந்தையாக” இருக்க விரும்புறேன். ஸோ, தயவு செய்து, உங்க மனசுல இருந்து, என்னைப்பற்றி நினச்சு இருந்தத அழிக்கனும்னு ரிக்வஸ்ட் பண்றேன். ப்ளீஸ்.
ராகவி: ஆமா, எங்களுக்கும் ”ஆல் க்ளியர்” ஆகிட்டு!!!
ரகு: ஆனந்த கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறார்.
”மையக்கருத்து:”
பெண்குழந்தைகள் மீது சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் வன்மமும், பெற்றவர்களின் மனதில் ஆயிரம் சந்தேகங்களையும், பதட்டத்தையுமே வளர்க்கின்றன. ஆண்கள் மீது இருந்த மதிப்பு குறைந்து, பயம் அதிகமாவது வேதனை…
இப்படி, ஒவ்வொரு பூக்களையும், மொட்டுக்களிலேயே நசுக்கி, அழித்துக்கொண்டே இருந்தால், வரும் காலத்தில் பூக்களுக்கு எங்கே போவீர்கள்?
கண்களை மட்டும் கவரும் ”ப்ளாஸ்டிக் பூக்களை” அணிந்து கொள்ள வேண்டியது தான்!!! வேறு என்ன செய்ய?
இக்குற்றத்திற்கு கடும் தண்டனை மட்டும் தீர்வாகாது. அடிப்படையில் இருந்து கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம்.
பெண் என்பவள், இன்னோரு பாலினம் அவ்வளவே.
அவர்களுக்கு அடிபட்டாலும் வலிக்கும். நமக்கு பட்டாலும் வலிக்கும். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்ல வேண்டியது பாவங்களை அல்ல.. படிப்பினைகளை.. நல்லொழுக்கங்களை!!!
நன்றியுடன் தேவா…
No comments:
Post a Comment