தவற விட்ட மழை...
பூமி நனைக்க புறப்பட்ட மழைத்துளிகள்..
இன்னும் வந்து சேரவில்லை.
வாசலில் அமர்ந்தபடி யோசித்திருந்தேன்...
மழையை வரவேற்கும் கவிதையொன்றை..
காகிதம் நிறைக்க வார்த்தைகள் கிடைக்காமல்...
வானம் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.
என் வாசல் வழி சென்ற காற்று..
அறிந்திருக்கக்கூடும் என் தேடலை.
காற்று சொல்லி வந்து சேர்ந்தன...
என் வாசம் வராத வார்த்தைகள்.
வரவேற்பதா வேண்டாமா எனும் என் யோசனையை
அலட்சியபடுத்தியபடியே என் முன் அமர்ந்து...
காகிதம் ஏற விருப்பம் தெரிவித்தன.
வார்த்தைகளை அனுப்பிய காற்றே...
காகிதம் பறித்து சென்ற போது...
ஏனோ இறுக்கி பிடிக்க மனமின்றி...
காற்றின் பாதையில் பறக்கவிட்டேன் காகிதத்தை.
என்னை பார்த்தபடி அமர்ந்திருந்த வார்த்தைகளை...
புறக்கணித்து.. உள் சென்று கதவடைத்து விட்டேன்.
நான் தவற விட்ட மழையில் நனைந்து...
கரைந்திருக்ககூடும் காத்திருந்த வார்த்தைகள்...
நன்றி: சசிதரன், தமிழ்கவிதைகள் community
----------------------------------------------------------------
உடையும் தெய்வத்தின் குழந்தைகள்
பலர் ருசி அறியும் காலத்தில்,
அவர்கள் பசி அறிகிறார்கள்!
பலர் சுகம் அறியும் காலத்தில்,
அவர்கள் சுமை அறிகிறார்கள்!
பலர் சினம் அறியும் காலத்தில்,
அவர்கள் குணம் அறிகிறார்கள்!
பலர் சோகம் அறியும் காலத்தில்,
அவர்கள் லோகம் அறிகிறார்கள்!
இப்படி அனைத்தையும் பலருக்கு முன்னமே அடைந்த அவர்களால்,
பலர் பெற்ற விலைமதிக்க முடியா..., அன்னை என்ற,
தெய்வத்தின் உடைக்கமுடியா பாசத்தை மட்டும்...
அடைய முடியாமல் உடைகிறார்கள் பல துளிகளாய் !!!!!!!??
நன்றி: பாலாஜி, தமிழ்கவிதைகள் community
--------------------------------------------------------------
என் இனியவனே
என் இனியவனே
ஆயுதம் உயிர் கொள்ளும் ஆகவே
சொற்வாள் எடு சொற்போர் தோடு
கத்தியல்ல காகிதமே வெல்லும்
என்றுரை
மகாத்மா உரைகலேல்லாம்
மீண்டும் உயிர்கொள்ள
உயிர்த்தெழுவாய் என்னவனே
சாதிகளும் மதங்களும் இந்தியரின்
மூளையைவிட்டு மறையவும்
முளைவிட்டால் மிதிக்கவும்
ஓடி வா நண்பனே
நீ
வேண்டும் ஒரு இந்தியனாய் ...
நன்றி: immanuvel, தமிழ்கவிதைகள் community
No comments:
Post a Comment