Wednesday, 10 September 2008

6, கதை சொல்ல போறேன்...

எனக்கு பிடித்த கதைகள் :

(தினமும் காலை வானொலியில் இன்று ஒரு தகவலில் கேட்டது)

திருடனின் ஏமாற்றம்:

ஒரு நாள் ஒரு திருடன் ஒரு வீட்டில் திருட சென்று இருந்தான். ஆனா பாருங்க அந்த வீட்டை பக்காவா பூட்டி வைத்து இருந்தாங்க. அங்க ஒரு சின்ன துவாரம் போன்ற ஜன்னல் மட்டும் தான் தொறந்து இருந்துச்சி.. அதுல எவ்வளவோ முயற்றி செஞ்சு பாத்தும் நுழைய முடியல.. ரொம்ப கவலையோட (!) திரும்பி வந்தான். இன்னைக்கு பொழப்பு போச்சே னு ரொம்ப feel பண்ணான்.

மறுநாள் காலை அந்த ஊருக்கு ஒரு கலை கூத்தாடி அவனது குடும்பத்தோடு சேர்ந்து பல வித்தைகளை காமிச்சுக்கிட்டு இருந்தான்.. அதுல ஒரு விதை அந்த திருடனை ரொம்ப கவர்ந்துட்டு..

கலை கூத்தாடி ஒரு சிறிய வலயத்துக்குள் முதலில் நுழைந்தான். பிறகு தனது மனைவியை நுழைய வைத்தான். பின்னர் தனது குழைந்தையும் அதுல நுழைய வச்சு ரொம்ப ஆச்சர்ய படுத்திக் கொண்டு இருந்தான்.

அந்த வித்தைகள் அனைத்தும் முடிஞ்ச பின்னாடி திருடன் மெதுவாக அந்த கலை கூத்தாடிய கூப்பிட்டு பேரம் பேச ஆரம்பிச்சான்.

உனக்கு ஒரு நாளைக்கு எவ்ளோ பணம் கிடைக்கும். ?? அவன் ஒரு அம்பது நூறு கிடைக்கும் அய்யா. னு ரொம்ப பணிவா சொன்னான்...

சரி .. உனக்கு நிறைய பணம் தர்றேன். எனக்கு ஒரு உதவி செய்வியானு கேட்டான். அதுக்கு அந்த கலை கூத்தாடியும் சரி னு சொல்லிட்டான்.

அன்று இரவு,

திருடன் அவனை அந்த வீட்டுக்கு அழைத்து சென்றான்.. அங்கே அந்த துவாரத்தை காண்பித்து, இங்கே நீ நுழைந்து எனக்கு தேவையானதை எடுத்து வர வேண்டும். பிறகு ரெண்டு பெரும் பங்கு போட்டுக்கலாம் னு பேசி நுழைய சொன்னான்.

ஆனா பாருங்க அவனால அங்க நுழைய முடியல. திருடனுக்கு ரொம்ப டென்ஷன் ஆகிட்டு.. யோவ்.. அங்க மட்டும் நீங்க மூணு பேரு சின்ன வட்டத்துக்குள்ள நுழைந்து வித்தை காட்டினீங்க. ஆனா இங்க ஏன் முடியல?? கொஞ்சம் காட்டமாவே கேட்டு விட்டான்..

அதுக்கு அந்த கூத்தாடி.. அய்யா சாமி.. நீங்க சொல்றது என்னவோ உண்மை தான். ஆனா நான், அம்பது பேரு சுத்தி நின்னு கை தட்டும் போது எனக்கு என்னமோ easy a இருந்திச்சி. அதனால நீங்க இப்போ போய் ஒரு அம்பது பேர கூட்டிட்டு வாங்க. நான் உடனே இந்த துவாரத்துக்குள்ள நுழைஞ்சி உங்களுக்கு வேண்டியத இந்த வீட்டுல இருந்து எடுத்து தர்றேன்னு சொன்னான்...

அவ்ளோ தான் அத கேட்ட உடன அந்த திருடன் மயங்கியே விழுந்துட்டான்....

moral of the story:
ஒருவனை நாம் உற்சாக படுத்தும் பொது அவன் செய்யும் காரியங்கள் அவன் இயல்பாக செய்பதை விட பல மடங்கு வேகம் இருக்கும்..
களவே செய்தாலும் அதற்கு கூட்டு சேர்த்தால் முடிவு நமக்கு சாதகமாக இருக்காது..

No comments: