தொடக்க கல்வி:
-----------------------
பால்ய கால பருவத்தில் ஒரு சிறார் பள்ளியில் ( என் வீட்டுக்கு பக்கத்துல இருந்த ஒரு அரசு தொடக்க பள்ளி) எனது ஆரம்ப கால கல்வியை தொடங்க ஆரம்பித்தேன்....
ஹ்ம்ம். அதுவும் அழகி படத்துல இருக்கற மாதிரி குறும்புகளுடன் கூடிய அனுபவங்கள் நிறைந்த பள்ளி தான். (ஒண்ணாம் கிளாஸ ரெண்டு வருஷம் படித்தது வேறு விஷயம்)..
அப்போது சிறு வயதாக இருந்ததுனால பாலின (!) வேறுபாடு இல்லாம தொடர்ந்தது எனது படிப்பு... (இப்போ இருக்கற பொடுசுங்க சின்னதுலேயே பழுத்த பழமாக மாறிட்டு இருக்குங்க. )...
எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு.. என் கிளாஸ் ல ஒரு பொண்ணு (அவங்க பேரு பக்கத்து தெரு பொண்ணு). என்கிட்டே நல்ல வம்பு இழுக்கும்... கோபத்துல கிள்ளி விட்டுட்டு ஓடிடுவேன்.. அப்புறம் சின்ன பந்தயம் வேற.. நான் கிள்ளி வச்சதுக்கு பதிலா அவங்க என்னோட தலைல கொட்டனும்.. (நான் கொஞ்சம் வளத்தி ஜாஸ்தி..).. எவ்வளவோ முயற்றி செஞ்சு பாத்தாங்க.. ஹ்ம்ம். ஹ்ம்ம் முடியல. ஆனா. கிளாஸ் ல உக்காந்து இருக்கும் போது மேடம் அவங்க முயற்றியில வெற்றி அடைஞ்சாங்க... (அப்பப்பா என்ன ஒரு கொட்டு... ) அப்பதான் அவங்க எவ்ளோ கோபத்துல இருந்தாங்கன்னு தெரிஞ்சுகிட்டேன்...
அப்புறம் எங்க பள்ளியில் நிறைய மரங்கள் இருக்கும்.. அதனால நாங்க (பசங்க மட்டும் தான்) நிறைய கேம்ஸ் விளையாடுவோம்.. அதுல மரக்கொரங்கு -னு ஒரு கேம் ரொம்ப பேமஸ் .. அதுல ஒருத்தன் ஒரு குச்சிய ஒரு வட்டத்துக்குள்ள போட்டு அத பாதுகாப்பான். மத்த வாலுங்க மரத்து மேல இருக்குங்க.. அந்த காவல் காரன் மரத்து மேல ஏறி எவன தொட்டாலும் அவன் அவுட்.. அந்த கேப் ல வேற ஒரு பையன் இறங்கி அந்த குச்சிய எடுதாச்சினா மறுபடியும் அதே காவல்காரன் தொடரனும்...
இப்பல்லாம் பசங்க கம்ப்யுட்டர் முன்னாடி உக்காந்து விளையாடுற கேம்ஸ் தான் விளையாடுறாங்க. அதனால குழு விளையாட்டுக்களின் எண்ணிக்கை குறைஞ்சுட்டே வருது...
இது மாதிரி நிறைய அனுபவங்கள் .. .. .. நிறைய நினைவுகள்.. .. ..
மத்தபடி நான் கொஞ்சம் படிப்புல கெட்டி.. அதனால இன்னைக்கும் என்னோட தொடக்கபள்ளி ல என்ன ஞாபகம் வச்சு இருக்காங்க..
அப்படியே ரொம்ப ஜாலியா முடிஞ்சது என்னோட தொடக்க கல்வி..
அடுத்து ஆறாம் வகுப்புக்கு வேற பள்ளியில என்னைய சேர்த்து விட்டாங்க. (அங்க வெறும் பசங்க மட்டும் தான். :-( )
தொடரும் .. .. ..
No comments:
Post a Comment