Saturday, 27 September 2008

15. பிடித்த கவிதை தொகுப்பு - 4

உண்மை கோவில்களும், உயிர் வாழும் தெய்வங்களும்..!

பல தோல்விகளால் வந்த பாரத்தால் விரக்தியில் கடவுள் நினைவு,
சரி கண்டுகொள்ளலாம் என கோவிலிக்குள் நுழைந்தால்,
ஏனோ! எப்போதும் போல் வெறுமைதான் மிஞ்சியது,!

மனதோரம் பாரம் அழுத்த..கண்கள் முட்ட கோவிலின் வெளியே வந்தேன்,
பாரம் குறைக்க, வெறுமையை மறக்க அமைதி வேண்டி அருகில் இருந்த..
பசுமை நிறைந்த பார்வையற்றவர்களுக்கான பள்ளியில் நுழைந்தேன்..!!

அதோ சற்று அருகாமையில்,பார்வையற்ற சிறார்கள்...,

விளையாட்டுமுதல் படிப்பு வரை நமக்கான அனைத்தையும் கற்கிறார்கள்,
ஆனால் நம்மை விட பல மடங்கு பளு சுமந்து..கண்ணீருடன்.!!

சற்று மனதை நெருடியதால் பாரத்துடன் அமர்ந்தேன் அவர்கள் அருகாமையில்,
என்னுடைய உடை பட்டு வருகையை உணர்ந்தவனாய் ஓரு சிறுவன்,
தன் கைகளால் தேடி தடுமாறி பிடித்தான் என் கைகளை!!

அந்த பிஞ்சு விரல் பட்டதும் ஏனோ மனது வலித்தது பாரத்துடன்,

இதோ தினமும் என் செவிகளில் ஒலித்து கொண்டிருக்கும் அவன் கேள்வி!!!!

அண்ணா,
கண்கள்னா என்னனா? எப்படினா இருக்கும்? எங்கனா கிடைக்கும்? எனக்குனா கிடைக்காதா அண்ணா?

அய்யகோ, கண்ணீர் என் கண்களை மறைக்க சரிந்து அமர்ந்தேன் தற்காலிக குருடனாய்!!!!
உணர்ந்தேன் கண்ணிருந்தும் நான் பட்ட தோல்விகளுக்கான காரணங்களை, அறிந்தேன் அந்த தோல்விகள் எல்லாம் தோல்வி அல்ல என்பதை,,!!

அந்த சிறுவனின் ஆக்க பேச்சில் கண்டேன் கடவுளை!!
சற்றே அவனிடம் விடை பெற்று நடந்தேன் புதிய பிறப்பாய்..,

இத்தனை நாளாய் உண்மை கோவிலை பார்க்க தவறிவிட்ட ஏக்கம் நடையில் உணர முடிந்தது,

இப்பொழுதெல்லாம்,தோல்விகளின் போது நினைத்து கொள்கிறேன்,
அந்த தெய்வங்களையும் அவர்களுக்கான உண்மை கோவிலையும்!!!

வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு சென்று உயிர் வாழும் தெய்வங்களை தரிசிக்கிறேன்!!!

எனக்கான வெற்றிகள் அனைத்தும்,
அவர்களிடம் பெற்ற வரமாகவே தோன்றுகிறது !!!

உங்களுக்கும் வரம் கிடைக்கும், கைகோருங்கள் எங்களுடன்!!..,

சென்று வருவோம் உண்மை கோவிலுக்கு,

வென்று வருவோம் பல தெய்வங்கள் தரும் வாழ்த்து வரங்களை!!!

"தமது கண்களை தானம் செய்த தெய்வங்களுக்கு", இந்த உயிர் வரிகளை காணிக்கையாக்கும்,,,..., :
உங்கள் சேவகன்.... -laajee..,

நன்றி, பாலாஜீ, தமிழ்கவிதைகள்

No comments: