Saturday, 27 September 2008

16. சாமி தரிசனம்!

கூட்டத்தில் சிக்கி வியர்வை வழிய,
சிறப்பு தரிசனம் வேண்டி சிறப்பாக கவனித்து! முன்னேறி சென்ற
அந்த சிறப்பு பக்தர்களை பார்த்து மனம் நொந்து,
சென்றேன் ஆலயத்தின் கருவறைக்கு,
அங்கே கடவுளின் உருவத்தை (ம்ம்ம். முகத்தை மட்டுமே) லேசாக
பார்த்துவிட்டு, விட்டால் போதும் என்று
வெளியே வந்து விட்டேன் சாமி தரிசனம் பெற்று விட்டோம்
என்ற என் குடும்பத்தினரின் வார்த்தைகளின் இடையில் ...

நன்றி: தெய்வேந்திரன், தமிழ்கவிதைகள்

அட, சத்தியமா நான்தாங்க எழுதினேன். (சொந்த அனுபவம்)

No comments: