Monday, 8 September 2008

5. பிடித்த கவிதை

ஒரு தோழரின் கவிதை.. ..

ஏனோ அது நமக்கு சுள்ளென சுடும் வகையில் எழுதி இருந்தார்.. .. சற்று சிந்தித்து செயல் படுவோம்.

பேச்சில் தமிழை உபயோகப்படுத்துவோம்..

பணியில் ஆங்கிலத்தை உபயோகப்படுத்துவோம்


குத்திக் காட்டியது - என் தமிழ்.....!



தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
'Sorry' தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை
போர்த்தி விடும் கருணை - தூக்கத்திலும் சொல்வேன்
'Thanks' ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் - இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
'Happy Birthday da' என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
'Good Morning Uncle' என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
'Hai' என்று …!

இரவில் … வீட்டிற்கு செல்லும் வழியில் - காலில்
குத்தியது முள் …

'அம்மா' என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை - என்னை
குத்திக் காட்டியது - என் தமிழ்....!


1 comment:

Chockalingam said...

nandru...mika nandru....