Friday, 19 September 2008

9. படித்ததில் பிடித்தது - நட்பு ..

நிரந்தரம்:

இரு வாரங்களுக்கு முன்பு நாம் முகம் பார்த்த
நிலவு இன்று உருத்தெரியாமல்... அமாவாசையாம்..

இன்று செடியின் கீழ் சருகாய், நேற்று நீ அரைமணி
நேரம் கண்சொட்டாமல் ரசித்த செம்பருத்தி

சாஹித்திய நேரங்களில் நொடியில் மனதுள்
ஜனித்து மறித்து போதும் கவிதைகள்..

கை குலுக்கும் போதே விடை பெற்றுப்
போகும் புது அறிமுகங்கள்

தேவைகளின் போது மட்டும்
தேடி வந்து போகும் நண்பர்கள்

இப்படி நிரந்தரமில்லா நிழல்களிடையில்
நிரந்தரமாய் நீயும், உன் நினைவுகளும் மட்டும்..



தொலைந்து போன நேசத்திற்கு..

கல்லூரியில் நான் அதிக நேரம்
செலவிட்டது உன்னோடுதான்..
என் கனவுகள், கற்பனைகள் அதிகம்
பதிர்ந்து கொள்ளப்பட்டது உன்னிடம்தான்

உன் மீது உன்னை விட நம்பிக்கை வைத்தது நான்
என் மீது என்னை விட நம்பிக்கை வைத்தது நீ..

அன்று,
நம் நண்பர்கள்
நம் உலகம்
நம் வேலை
நம் பொழுதுபோக்கு

இன்று
உன் நண்பர்கள்
உன் உலகம்
உன் வேலை

என் நண்பர்கள்
என் உலகம்
என் வேலை

என் தயவில் நீயில்லை
உன் தயவில் நானில்லை

என் துன்பங்களுக்கு உன் தோள் வரவில்லை
உன் துன்பங்கள் எனக்குச் சொல்லப்படவில்லை

நட்புக்கு போலி முகம் தேவை இல்லை- நண்பா
நாம் நாமாக இருப்பதுதான் நட்பு

ஊடலும் கூடலும் காதலில் மட்டும்தான் சுகம் நண்பனே
ஊடல் கொண்ட நட்பு கல் விழுந்த மண்பானை

ஆனால் உறவுகளைப் பற்றி கவலைப்படாதவன் நான்
உறவுகளே தேவை படாதவன் நீ..
நம் நட்பு நமக்கு தேவையில்லைதான்

உன் மீது எனக்கு கோபமில்லை
உன் பிரிவு வேதனையுமில்லை

ஆனால் என மனதின் ஈரமான பக்கங்களில்
உன் பெயர் இன்னும் எழுதப் பட்டுத்தான் இருக்கிறது

நலமாய் இருப்பாய் என நம்புகிறேன் நண்பனே..


நன்றி :
Edwin Britto S
http://www.employees.org/~silva/

No comments: