Saturday 25 July, 2009

30.கவிதை கரு


காலைப பனியில் மலர்ந்த கவிதை
கதிரவன் கதிரில் புலர்ந்த கவிதை

மழலையின் செல்ல சிணுங்கலில் எழுந்த கவிதை
அன்னை அன்பில் உணர்ந்த கவிதை
தந்தை பண்பில் வளர்ந்த கவிதை

இயற்கையின் சிரிப்பில் உதித்த கவிதை
இயற்கையின் இறப்பில் கலங்கிய கவிதை
மழைத் துளியில் சிலிர்த்த கவிதை

நட்பின் வலியில் பதிந்த கவிதை
காதல் உணர்வில் கனிந்த கவிதை

இரவின் கனவில் கலந்த கவிதை
ஜனனம், மரணம் உணர்த்திய கவிதை

அனைத்தும் படைத்த
கவிதை படைப்பாளிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்


இவண்,
கவிதை கரு கிடைக்காமல் கவிதை எழுத முயன்றவன்