Saturday 15 February, 2020

அன்பு தினக் கவிதை!

எலுமிச்சை தோலுடையவள்
கருப்பட்டி குணத்தவள்

அவியலாய் கவர்ந்தவள்
குவியலாய் திரிபவள்-அன்புக்
குவியலாய் திரிபவள்

தென்றலாய் வீசுபவள்
குன்றாக இருந்தவன் - மீது
தென்றலாய் வீசுபவள்

கடுஞ்சொல் தாங்கா மனமுடையவள்
கடுஞ்சொல் கண்டு விலகி நிற்பவள்

கலைகளில் ஆர்வமிகுந்தவள் - ஆம்
பல கலைகளில் ஆர்வமிகுந்தவள்

வளையாவிடினும் வளைத்து ஆடுபவள்
தன் கலைத் திறனை
மலையாத வண்ணம் காப்பவள்

சினத்தை சிக்கனமாக்க நினைத்தவள்
குணத்தை குறைவின்றி காட்டுபவள்

அனைவருக்கும் அன்பானவள் - எனக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?

ஆம், எனக்கும் அன்பானவளே!

அன்பால் உலகை ஆள நினைக்கும்
என்பால் அன்பு கொண்டவளுக்கும்

இனிய அன்பு தின வாழ்த்துகள்!!! 💐💐💐