Sunday 8 March, 2020

மகளிர் தினக் கவிதை 2020

மகளிரைக் கொண்டாடும் திருநாள் - ஆம்
கொண்டாட வேண்டிய திருநாள்

மங்கையராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டும் - ஆம்

மாதவம் செய்தவர்கள் மகிழ்வாக
வாழவும் வழி செய்திட வேண்டும்

அன்னையாய் உதித்தவர்கள் - ஆம்
நமக்கு முன்னே உதித்தவர்கள்

சகோதரிகளாக பிறந்தவர்கள் - ஆம்
நம் அன்னை வயிற்றிலே உடன் பிறந்தவர்கள்

உடன் பிறவா தோழிகள் - ஆம்
நம் பிரிவைத் தாங்கா தோழிகள்

நம் வாழ்வில் பாதியாக இணைந்தவர்கள் - ஆம்
மனைவியாக மீதி வாழ்வில் பயணம் செய்பவர்கள்

மகளாய் தரிப்பவர்கள் - ஆம்
மகளாய் அவதரிப்பவர்கள்

முற்றிய சோதனைகளைக் கடந்து
வெற்றியின் படிகளாக மாற்றிய பெண்கள்

நாட்டின் கண்களாக இருப்பவர்கள் - ஆம்
நம் நாட்டின் ஒளி வீசும் கண்களாக இருப்பவர்கள்

அனைவரும் பெண்களாக இருப்பவர்கள் - ஆம்
நம் வாழ்விலும் கண்களாக இருப்பவர்கள்

கொண்டாடப் பட வேண்டியவர்கள் - ஆம்
மகளிர் தினத்தன்று மட்டும் அல்ல

தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆம்
தினந்தோறும் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்

அன்புக் குவியலாய் இருக்கும் மகளிர் அனைவரும்
இமயமாய் உயர்ந்து சுதந்திரம் மற்றும் பாதுகாப்புடன் நடந்து

வளமாக வாழ வழி செய்ய உறுதி எடுப்போம்

இனி ஒரு விதி செய்வோம்
மங்கையினர் பாதுகாக்கும் வழி செய்வோம்!!!

நன்றி,
தெய்வேந்திரன்